ஐ.தே.க நெருக்கடி; 20க்கு முன் செயற்குழுவை கூட்டுங்கள்

51 பா.உறுப்பினர்கள் ரணிலுக்கு கடிதம்

ஐக்கிய தேசியக் கட்சியில் நீடித்து வரும் நெருக்கடிகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தீர்வுகாணுமாறு 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம் கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவை தாமதமின்றி

கூட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நிருவாக மறுசீரமைப்பைச் செய்து தலைமைத்துவம் உட்பட அனைத்து நிருவாக மாற்றத்தை செய்யவேண்டுமெனவும் இக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைத்தது போன்று கட்சித் தலைமைப் பதவியும் அவருக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் அதற்கான முடிவை எடுக்கும் பொருட்டு உடனடியாக செயற்குழு கூட்டப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க வருட இறுதி விடுமுறைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி வெளிநாடு செல்லவிருப்பதால் அதற்கு முன்னர் உட்கட்சிப் பூசலுக்கு உறுதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டே 20 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் செயற்குழுவைக்கூட்டுமாறு சஜித் தரப்பைச் சேர்ந்த 51 எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

எம்.ஏ.எம். நிலாம்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை