முறைப்பாடுகளை வழங்க அவசர இலக்கம் அறிமுகம்

யாழில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பா முக்கிய கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்படி இக் கூட்டத்தில் டெங்கு தொடர்பான முறைப்பாடுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் அவசர அழைப்பு இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச செயலகங்கள் மற்றும், உள்ளூராட்சி திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், வீட்டு கழிவுப் பொருட்களை உரிமையாளர்கள் அற்ற காணிகளில் வீசுதல் மற்றும், இறந்த உயிரினங்களின் உடல்களை வீசுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது, மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களினால், கழிவகற்றும் நடவடிக்கைகள், குப்பைகளை வீதிகளில் கொட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 3 வாரங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கழிவகற்றலை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது, பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், கழிவகற்றல் மற்றும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஆளணி பற்றாக்குறை தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவணைகள் மற்றும், வீதிகளில் வீசுவதனால், டெங்கு நுளம்பு பெருக்குகின்றன.. பொது மக்கள் விழிப்புணர்வின்றி வீதிகளில் அவற்றை வீசுவதனால், டெங்கு நுளம்பு உருவாகுவதாகவும், சுட்டிக்காட்டினார்கள்.

டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் ஆனால் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டினர்.

 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை