மேல் மாகாண ஆளுநர் இன்று பதவிப்பிரமாணம்

மேல் மாகாண புதிய ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல இன்று (25) திங்கட்கிழமை கடமை பொறுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள மேல் மாகாண சபையின் புதிய கட்டிட தொகுதியில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேல் மாகாண பத்தாவது ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இவர்,

வியத்மக வேலைத்திட்டத்தின் முன்னோடி பெண் புத்திஜீவி ஒருவராக இருப்பதுடன் வைத்திய நிபுணராகவும் விளங்குகிறார். இதேவேளை,ராஜகிரியவில் ஜனஜய கட்டிட தொகுதியில் இயங்கி வந்த ஆளுநர் மற்றும் ஆளுநர் செயலக பணிமனை இன்று முதல் பத்தரமுல்லவில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டிட தொகுதிக்கு இடம் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை