வவுனியா ஈச்சங்குளத்தில் வீடு முற்றாக எரிந்து நாசம்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு ஒன்றே தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்படுத்த அயலவர்கள், கிராம மக்கள் முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. வீட்டில் இருந்த உடமைகள், பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை