ஜனாதிபதியை எதிர்த்து டில்லியில் ஆர்ப்பாட்டம்; வைகோ கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2 நாள் பயணமாக

இந்தியாவுக்கு நேற்று பயணமானார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட ம.தி.மு.க.வினர் இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதில் அக் கட்சியின் மற்றொரு எம்.பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை