முப்படையின் தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் எமது முப்படையினர் உட்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (08) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார். 

மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.  

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.     அதிகாரிகளுக்கான சேவை பதக்கங்களும் சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதி யினால் வழங்கப்பட்டது.  ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது. 

Sat, 11/09/2019 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை