அம்பன்பொல பகுதியில் யாழ்தேவி தடம்புரண்டது

திருத்த வேலைகள் தீவிரம்

யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் வடக்கு நோக்கிய ரயில் சேவைகள் நேற்றிரவு தடைப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலே இவ்வாறு தடம்புரண்டது.

 

கல்கமுவ மற்றும் அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே தடம் புரண்டது. 5 ரயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதால் வடக்கு நோக்கி பயணிய ரயில் பயணங்கள் மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் ரயில் அம்பன்பொல வரையில் பயணிக்கும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நேற்று மாலை தெரிவித்தது.

வடக்கு நோக்கி பயணிக்கும் இரவு நேர ரயில் பயணங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாவும் விரையில் பாதை கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்தது.

நமது நிருபர்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை