ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம் விலகியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் கட்சியின் அமைப்பாளர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கான கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார்

ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சிவாஜிலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி ரெலோ அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத் - பருத்தித்துறை விசேட நிருபர்  

Sun, 11/03/2019 - 12:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை