திருமலையில் 40 மீனவர்களுக்கு வள்ளங்கள் வழங்கல்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீனவர்களுக்கு அல்- ஹிக்மதுல் உம்மா அமைப்பின் ஏற்பாட்டில் ஐ.எச்.எச்.என்.எல் 40 வள்ளங்கள் நேற்று முன்தினம் (28) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு அல்- ஹிக்கமதுல் உம்மா அமைப்பின் தலைவர் ஹஸ்ஸாலி முகம்மட் பாதிஹ், தலைமையில் நடைபெற்றது.

துருக்கி மற்றும் போலந்து ஐ.எச்.எச்.என்.எல். அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் ஊடாக இதற்கான வள்ளங்கள் பெறப்பட்டன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவ குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக நெதர்லாந்து நாட்டின் ஐ.எச்.எச்.என்.எல். அமைப்பின் சலாமி யூக்சில், விசேட அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர், எம்.எச்.எம். கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை