சிரியாவின் துருக்கி எல்லையில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி

துருக்கியுடனான சிரியாவின் எல்லை நகரில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கி ஆதரவு போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தால் அப்யாத் நகரில் மக்கள் குழுமியிருந்த சந்தை பகுதி ஒன்றிலேயே கடந்த சனிக்கிழமை இந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

வட கிழக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருப்பி ஆரம்பித்த படை நடடிவடிக்கையை அடுத்து இந்த பகுதியில் அண்மைக் காலத்தில் கடும் மோதல் நீடித்து வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வைப்பை குர்திஷ் போராளிகள் செய்ததாக துருக்கி குற்றம்சாட்டுகிறது. எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை