லெபனானில் ஆர்ப்பாட்டத்தால் அரசின் கூட்டணி கட்சி விலகல்

வரி அதிகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் லெபனானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வரும் நிலையில் அரச கூட்டணியில் இருந்து கிறிஸ்தவ கட்சி ஒன்று வெளியேறியுள்ளது.

கடந்த சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் சாத் ஹரிரியின் கூட்டணியில் இருந்து லெபனான் போசஸ் கட்சியின் நான்கு அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர்.

“நிலைமையை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறிவிட்டதாக நாம் நம்புகிறோம்” என்று அந்தக் கட்சியின் தலைவர் சமிர் ககி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளை கையாளத் தவறிய அரசை விலகும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்புகின்றனர். இந்தப் பதற்றம் ஆரம்பித்தது தொடக்கம் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருத்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை