ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி முடிவு என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி முடிவு என்ன?-SLFP Will Announce it's Decision Tomorrow

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு நாளை (07) அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் (UPFA) பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இன்றையதினம் (06) அக்கட்சியினால் ஊடகவியலாளர் மாநாடொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் அது இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை கட்சியின் தலைவரான ஜனாதியிடம் ஒப்படைக்கும் தீர்மானம், நேற்று (05) இடம்பெற்ற சுதந்திக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

சு.க.வின் இறுதி முடிவு, நாளை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அல்லது ஜனாதிபதியினால் வெளியிடப்படும், என ஐ.ம.சு.மு. (UPFA) பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Sun, 10/06/2019 - 17:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை