பாகிஸ்தானை வென்ற இலங்கை வீரர்களுக்கு பணப் பரிசு

பாகிஸ்தான் அணியுடனான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு 145,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 26 கோடி ரூபா) பணப்பரிசை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். சர்வதேச டி20 அரங்கில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வெற்றிகொண்டு வரலாறு படைத்தது அனுபவமற்ற வீரர்களைக் கொண்ட இலங்கை அணி.

“பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். எனவே, அவர்களது திறமைகளை பாராட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும். அதன்படி, டி20 தொடரில் விளையாடிய வீரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 90 இலட்சம் ரூபா) பணத்துக்கு மேலதிகமாக இன்னும் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன், டி20 கிரிக்கெட் தொடரில் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கவும் இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை