திருகோணமலை மாணவர்களுக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்கள்

தேசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் திருகோணமலை மாவட்ட மெய்வன்மைச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய 20 வயதுப் பிரிவில் எச்.எம். றிஹான் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தையும் எம்.எஸ்.இப்ராஸ் குண்டு எறிதலில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றுள்னர். எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற மைதானத்தில், எறிதல் நிகழ்ச்சிக்கு உரிய சரியான நிறையினால் அமையாத உபகரணங்களை கொண்டும் தமது விடாமுயற்சியினால் பயிற்சியின்மூலம் தேசிய ரீதியிலான பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள். பிரதம பயிற்றுனரும் சர்வதேச மட்ட பதக்கங்களைப் பெற்றவருமான கே.எம்.ஹாரீஸ் மற்றும் விளையாட்டு மற்றும் பயிற்றுவிப்பாளருக்கான இணைப்பாளர் யாழின் மைந்தன் சகோதரன் தேசசக்தி குணாளன் இருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியினால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது.

இவர்கள் இருவரும் திருமலை மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு அதிகாரி ச. விஜயநீதனின் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை