வவுனியா வைத்தியசாலையில் குழந்தை பராமரிப்பு நிலையம் (டே கேயார்) மறுசீரமைப்பு செய்யப்பட்டு நேற்று (12) திறந்து வைக்கபட்டது.
வவுனியா வைத்தியசாலையின் ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் இந்தக் கட்டடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது. வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்குளம் குறூப் நிருபர்
Fri, 09/13/2019 - 06:00
from tkn