மன்னார் பரப்புக்கடந்தான் காட்டில் நீரின்றி யானைகள் அலைச்சல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக் கடந்தான் கிராமத்தில் உள்ள குளத்தில் நீர் குடிப்பதற்கு வந்த நோய்வாய்ப்பட்ட யானை மீண்டும் காட்டுக்குத் திரும்ப இயலாது அப்பகுதியிலே உலவுவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதால் காட்டு மிருகங்கள் நீர் குடிப்பதற்காக அலைமோதிய நிலையிலே இக்காட்டு யானை இப்பிரதேசத்துக்கு வந்துள்ளது. குளப்பகுதியில் யானை காணப்படுவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிராம அலுவலகர் அடம்பன் பொலிஸ், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

 -மன்னார் குறூப்நிருபர்-

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை