கட்சியின் செயற்குழு கூடி தீர்மானம்
நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,
மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரே தெரிவு செய்யப்படுவார். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இன்று உறுதியான தீர்வு வெளியிடப்படும். நபரை இலக்கு வைத்த நிபந்தனை அல்லாது நாடு தொடர்பிலான நிபந்தனைகளே பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கியிருந்தது.
இன்றைய தினம் ஐ. தே. கட்சியின் செயற்குழு கூடி இத் தீர்மானத்தை மேற்கொள்வதுடன் அதனைப் பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிக்கும்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn