தங்கக் கழிப்பறைத் தொட்டி திருட்டு

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சில் வீட்டில் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை தொட்டி திருடுபோயுள்ளது.

லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் உள்ள பெலன்கிம் அரண்மனை, அந்நாட்டு முன்னாள் பிரதமர் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும்.

இந்த அரண்மனையில் கடந்த 2016ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர் 18 கெரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை தொட்டியை உருவாக்கினார்.

சுமார் 5 மில்லியன் டொலர் மதிப்புக் கொண்ட இந்த கழிப்பறைத் தொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன் திருடப்பட்டது. இதையடுத்து அதனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், அரண்மனையை மூடியுள்ளனர். கழிப்பறை தொட்டி களவு போனது தொடர்பாக அரண்மனையின் பணியாளர் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை