கிண்ணியா கற்குழி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு திறப்பும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும்

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கு கடந்த (22)துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபினால் திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா கலந்து சிறப்பித்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் பிரதியமைச்சரின் கம்பெரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியும் இம் மைதானத்தில் இடம்பெற்றது. புளூபேர்ட்ஸ் மற்றும் கென்வூட் அணிகள் இறுதிச் சுற்றில் மோதியது 3:2 கோல்கள் கணக்கில் கென்வூட் அணியினர் சம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினர்.

அணிக்கான கேடயங்களையும் பரிசுத்தொகையினையும் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா வழங்கி வைத்தார்கள்.

இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் மற்றும் வட்டார வேட்பாளர் ஹாதி உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை