தலைமன்னாரில் 840 கி.கி. பீடி இலைகள் மீட்பு

தலைமன்னாரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஒருதொகை பீடி இலைகள்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இவ்வாறு பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

வட மத்திய கடற்படை கட்டளை பிரிவினால் தலைமன்னார் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை 18 பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.   

Wed, 09/25/2019 - 17:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை