வட மத்திய மாகாணத்தில் 207 பேருக்கு நியமனம்

வடமத்திய மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள பல்துறை சார்ந்த 207 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்காவினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நியமனம் பெறுகின்றவர்கள் சகலரும் தகைமையடிப்படையில் போட்டிப் பரீட்சைகளின் மூலம் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களாவர். இவர்களினுள் அரச முகாமைத்துவ சேவையாளர்களாக 71 பேரும், விவசாய ஆலோசகர்களாக 43 பேரும், கால் நடைகள் அபிவிருத்தி ஆலோசகர்களாக 26 பேரும், விவசாயம் நெற் செய்கை உத்தியோகத்தர்களாக 29 பேரும், ஆசிரியர் சேவையின் மூன்றாம் தர பெளத்த தர்மம் பரீட்சையில் தெரிவாகிய 27 பேர் உட்பட இன்னும் 27 பேருக்கும் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது மாகாண பிரதான செயலாளர் எச்.எம்.பீ. பண்டார ஆளுநரின் செயலாளர் ஏ.கே.என்.விக்கிரமசிங்க உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

அநுராதபுரம் மேற்கு தினகரன், அநுராதபுரம் தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை