என்னை அழித்து விடலாமென சிலர் நினைக்கின்றனர்

வவுனியா தலைமை காரியாலய வழிகாட்டி பெயர் பலகையை தகர்ப்பதன் மூலம் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகரசபையின் அனுமதியுடன் பொருத்தப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சில விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

இப் பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இவர்களது செயற்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் தகர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களின் செயற்பாட்டினால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும். இவ்வாறான வன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அடாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.

 

வவுனியா விசேட நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை