20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியது
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கட்சித் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று (18) பிற்பகல் கொழும்பின் காலி முகத்திடலில் இடம்பெற்ற 'தேசிய மக்கள் சக்தி' எனும் பெயரில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று (18) பிற்பகல் 4.00 மணியளவில் காலி முகத்திடலில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.
மாலை 6.00 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் செழிப்பான பாதையை நோக்கி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
from tkn