நாட்டு மக்கள் கேட்கும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச

இன்றைய சூழலில் நாட்டு மக்கள் கேட்கும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

கேகாலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாக ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனக் கூறிய அவர், எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவையே அனைத்து மக்களும் அதிகமாக விரும்புவதாகவும் இது தொடர்பில் ஐ.தே.க உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். நாட்டு மக்கள் கேட்கும் தலைவரை கொடுக்க வேண்டியது கட்டாயம் எனவும், அதே நேரத்தில் கட்சித் தலைவரின் தீர்மானம் இறுதித் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை மற்றும் மாத்தறையில் நடைபெற்ற ஐ.தே.க கூட்டங்களில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் ஏன் கலந்து கொள்ளவில்லை என ஊடகவியலாளர் வினவ, உத்தியோகப் பூர்வமாக வேட்பாளர் ஒருவரை கட்சி தெரிவு செய்வதற்கு முன்னரே அந்த வேட்பாளருக்கு இப்படி கூட்டங்களும் இப்படி வரவேற்பும் இருந்தால் உத்தியோகபூர்வ தெரிவின் பின் எப்படி இருக்கும் எனவும் அமைச்சர் வினவினார். இந்த நிகழ்வின் முன்னால் மாகான சபை அங்கத்தவர்கள், கேகாலை நகரசபை, மாவனல்லை, அரனாயக்க, ரம்புக்கன பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

கேகாலை தினகரன் நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை