கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் கென்டர்பரி பேராயர் வெல்பி ஆண்டகை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கென்டர்பரி பேராயர் பேரருட் திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஏப்ரல் 21 பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு நேற்று சென்றதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

விசேட வழிபாட்டிலும் கலந்துகொண்ட அவர் சிறார்களுக்குப் பரிசுப்பொருட்களையும் வழங்கினார். அவருடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் நிகழ்வுகளில் இணைந்து கொண்டிருந்தமையை படங்களில் காணலாம்.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை