இலங்கை–நியூசிலாந்து டி20 போட்டி அட்டவணை மாற்றம்

நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்த தொடரின் இரு டெஸ்ட் போட்டிகளும் திட்டமிடப்பட்டவாறு நடைபெறவிருந்தபோதும் அதற்கு பின் நடைபெறும் மூன்று டி-20 போட்டிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆஷஸ் தொடருடன் ஆரம்பிக்கப்பட்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாகவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதல் இரு டி-20 போட்டிகளும் ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டு மூன்று டி-20 போட்டிகளும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக முதல் இரு டி-20 போட்டிகளும் முறையே எதிர்வரும் ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 2 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணையின்படி முதல் இரு போட்டிகளும் தற்போது செப்டெம்பர் 1 மற்றும் 3 ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதோடு 3ஆவது டி-20 போட்டி மாற்றமின்றி செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வருகை அணியான நியூசிலாந்து தற்போது டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு டி-20 தவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இலங்கை, டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்திலும் டி-20 இல் எட்டாவது இடத்திலும் காணப்படுகிறது.

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை