போதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி முதல் இன்று காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்தில் 129சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த ஜூலை 05ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 8,993சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 08/17/2019 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை