பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திட்டம்

நிர்வாக, அதிபர்கள் சேவை அதிகாரிகளிடம்  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நாடளாவிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் தேசிய பாடசாலைகளில் தகுதியுடைய அதிபர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். 

இதற்கமைவாக அரச சேவை ஆணைக்குழு, கல்விச் சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதி பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர்கள் சேவை அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேவேளை, பாடசாலை கட்டமைப்பை கிரமமாக முன்னெடுப்பதற்கும் நாட்டின் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

இதற்காக கொள்கை அடிப்படையிலான திட்டங்களை முன்னெடுப்பதற்காக சமீப காலமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   அதிபர்கள் வெற்றிடங்களைக் கொண்ட தேசிய பாடசாலை பட்டியல் விண்ணப்பங்கள் கோரப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு தகுதியான அதிகாரிகளை நியமிப்பதற்கான சேவை, தரம், விண்ணப்பித்தலுக்கான தகுதி, நடைமுறை ஆகியவற்றுடன் ஏனைய அனைத்து தகவல் மற்றும் மாதிரி படிவங்கள் நளை (31)  ம் திகதி www.moe.gov.lk என்ற அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

விண்ணப்பதாரர்களினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி படிவத்திற்கு அமைவாக விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்பும் கடித உறையில் வலது பக்க மேல் மூலையில் தேசிய பாடசாலை அதிபர் பதவி என்று குறிப்பிட்டு ஆகங்ட் 20ம் திகதிக்கு முன்னர் உதவிச் செயலாளர், கல்விச் சேவை உதவிக் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும். 

இதே வேளை, கல்வி அமைச்சரினால் 2016 ஆம் ஆண்டில் கல்வி கட்டமைப்பிற்கு 4000 அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இலங்கை அதிபர் சேவையில் தரம் 3 ற்கு 1918 பேர் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்பொழுது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.(ஸ)

Tue, 07/30/2019 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை