கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்ட நாச்சியாதீவுக் கிராமத்தின் வீதிகள் காப்பட் இடப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றன.
நாச்சியாதீவு புதிய நகர் பாடசாலை வீதி, மையவாடி வீதி, வில்லு வீதி, ஆகிய மூன்று வீதிகளே காப்பட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக பாவிக்க முடியாத அளவுக்கு உடைந்தும், தூர்ந்தும் போயிருந்த இவ் வீதிகளை செப்பனிட்டு தருமாறு நாச்சியாதீவு பொது மக்கள், ஏ.ஆர்.எம்.தாரிக் ஊடாக அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இவ் வீதிகள் காப்பட் வீதிகளாக திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இப் பகுதியில் திருத்தியமைக்கப்படவேண்டிய வீதிகள் பல உள்ளதாகவும், அவற்றையும் திருத்தித்தருமாறு இப்பகுதி பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திறப்பனை தினகரன் நிருபர்
from tkn