சிக்சரால் காயப்பட்ட ரசிகைக்கு பரிசளித்த ரோகித் சர்மா

உலக கிண்ண ஆட்டத்தில் ரோகித் அடித்த சிக்சரில் பந்து, பெண் ரசிகையின் மேல் விழுந்து காயமடைந்தார். இதனை கவனித்து அவரை சந்தித்து ரோகித் பரிசளித்துள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்களாதேஷூடன் மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பாக ஆடினார். உலக கிண்ணம் தொடங்கியது முதலே, ரோகித் சர்மா சிறந்த நிலையில் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து விளாசினார். போட்டியின் இறுதியில் ஆட்டநாயகனாகவும் ரோகித் தேர்வு செய்யப்பட்டார். அவர் சிக்சர் அடித்தபோது ஒருமுறை பந்து, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மீனா எனும் ரசிகை மேல் விழுந்தது. லேசாக காயமடைந்தார். இதனை ரோகித் கவனித்துவிட்டார். போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்தார் ரோகித்.

மீனாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் சிறிது நேரம் கலகலப்பாக உரையாடிவிட்டு கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை