திருகோணமலை மாவட்டத்தில் இரு மாதிரி கிராமங்கள் திறப்பு

திருகோணமலை மாவட்டத்தில் செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரு மாதிரி கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மக்கள் பாவனைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலும் இந்த இரு கிராமங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கன்னியா மாங்காயுற்று பகுதியில் தொல்காப்பிய நகர் மற்றும் பெரியகுளம் பகுதியில் பாவநாசபுரம் ஆகியன தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் பாவநாசம் 225 வது கிராமம் கையளிக்கப்பட்டது.

இங்கு 17 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் தொல்காப்பிய நகர் 226 வது கிராமமாகும். இங்கு 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், சந்திப் சமரசிங்க,திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமார், பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை