பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு; வழமைபோன்று ரயில் சேவை

ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்றிரவுடன்  (29) முடிவுக்கு வந்துள்ள நிலையில், வழமை போன்று ரயில் சேவைகள் இடம்பெற்று வருவதாக, ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த போதிலும், அப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால், வாரந்தோறும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுழற்சி முறையிலான ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.

இத்தீர்மானத்திற்கு அமைய ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த நேற்றுமுன்தினம் (27) நள்ளிரவு முதல் நேற்று (28) நள்ளிரவு வரை சுழற்சி முறையிலான பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த 24மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

Sat, 06/29/2019 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை