இந்தியாவில் அனல் பறக்கும் வெயில்: 50 பாகை செல்ஸியஸை தொட்டது

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகரம் இந்தியாவின் வெப்பமான நகரமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு வெப்பநிலை 50.8 பாகை செல்சியஸ் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பல பகுதிகளில் வெயிலின் அளவு 45 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தீவிர அனல் காற்று வீசுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கோடைக் காலங்களில் அவ்வப்போது அதிக வெப்பநிலை பதிவாகும்.

ஆனால், இந்த வருடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. வட மாநிலங்கள், மேற்கு மற்றும் தென் மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இந்த வெயிலால் குறிப்பாக வீடற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து போலிஸார், தெருக்களில் கடை வைத்திருப்பவர்கள், கைவண்டி தள்ளுபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை