மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டி களுத்துறையில் 23 அணிகள் பங்கேற்பு

களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதுக்கு கீழ்பட்ட '2019 மைலோ உதைபந்தாட்ட இறுதிப்போட்டியின் ஆண்கள் பிரிவில் பிரபல பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை உதைபந்தாட்ட அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் அடிப்படையில் பலம்வாய்ந்த களுத்துறை திருச் சிலுவை கல்லூரி உதைபந்தாட்ட அணியை வெற்றி கொண்டதன் மூலம் களுத்துறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதுக்கு கீழ்பட்ட மைலோ உதைபந்தாட்ட போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்றது.

இதன்போது ஆண்கள் பிரிவில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 23 பாடசாலை உதைபந்தாட்ட அணிகள் இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டிக்கு பலம்வாய்ந்த களுத்துறை புனித சிலுவை கல்லூரி அணியும், பிரபல பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை அணியும் தெரிவாகின.

இதன் அடிப்படையில் இறுதிப்போட்டியின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் வீதம் பெற்று சமநிலையில் காணப்பட்டதால் பெனால்டி முறையில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க வேண்டிய நிலையில் பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் களுத்துறை புனித சிலுவை கல்லூரியை வெற்றி கொண்டதுடன் இரு அணிகளும் எதிர்வரும் 22 மற்றும் 23/06/2019 திகதிகளில் நாவலப்பிட்டி யில் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதுக்கு கீழ்பட்ட மைலோ உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

மேற்படி போட்டிகள் கடந்த 2019. ஜுன் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் களுத்துறை நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

களுத்துறை சுழற்சி நிருபர்

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை