மடகஸ்காரில் சனநெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

மடகஸ்காரில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது அரங்கத்திற்குள் ஏற்பட்ட சனநெரிசலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அணிவகுப்பு ஒன்றுக்கு பின் பொலிஸார் அந்த அரங்கில் வாயில்களை மூடிய நிலையில் மக்கள் வெளியேற முயன்றதாலேயே நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பட்டுள்ளனர்.

தலைநகரில் அன்டனானாசிவோ அரங்கில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதே அரங்கில் கடந்த செப்டெம்பரில் கால்பந்து போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த அரங்கில் இடம்பெற்ற இராணுவ அணி வகுப்பு மற்றும் இசை நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுள்ளனர்.

வாயில்கள் மூடப்பட்டு பொலிஸாரால் கூட்டம் தடுக்கப்பட்டதை அடுத்து நெரிசல் ஏற்பட்டதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை