அல்பேனிய பூகம்பத்தில் 100 வீடுகளுக்கு சேதம்

தென் கிழக்கு அல்பேனியாவில் இரண்டு மணி நேரத்திற்குள் ஏற்பட்ட ஆறு பூகம்பங்கள் காரணமாக நால்வர் காயமடைந்திருப்பதோடு சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தமது வீட்டின் சுவர், கூரை மற்றும் மேற் சுவர் இடிந்து விழுந்தே நால்வர் காயமடைந்திருப்பதோடு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லட்டதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“பால் கறப்பதற்காக காலை எழுந்தபோது பூகம்பம் ஏற்பட்டது. நான் பெரியவர்கள் மற்றும் சிறியவர்களை எழுப்பிக் கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடிவந்தேன்” என்று பூகம்பங்களின் மையப்புள்ளியாக இருந்த பிளொக் கிராமத்தின் 60 வயதான பெட்ரிட் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை