பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புமாறு வேண்டுகோள்

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புமாறு வேண்டுகோள்-Send Students to School-Army Commander Lieutenant General Mahesh Senanayake

எவ்வித பயமுமின்றி பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புமாறு, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் எவ்விதமான சந்தேகங்களும் இன்றி, நாளையதினம் (21) பாடசாலைகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பிவைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பாதுகாப்பு நிலை தொடர்பில் உத்தரவாதம் அளிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Mon, 05/20/2019 - 15:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை