நீர்கொழும்பு சேதங்கள்: நட்டஈடு வழங்க பிரதமர் ரணில் பணிப்புரை

நீர்கொழும்பில் நேற்று முன்தினம் (05) ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்ட பின்பு அவற்றுக்கான நஷ்டஈடுகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  

அதற்கமைய, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,  மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழ் காணப்படும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தினால் சேதங்களை மதிப்பிடுவதற்குத் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

Tue, 05/07/2019 - 12:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை