வவுனியா வளாகத்தை பல்கலையாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன் பிரகாரம் எதிர்காலத்தில் வவுனியா வளாகம் தனியொரு பல்கலைக்கழமாக இயங்கவுள்ளது.  

யாழ் பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்வி மற்றும் வணிக விஞ்ஞானம் போன்ற பீடங்கள் வவுனியா வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த வணிக கல்வி பீடத்தின் கீழ் நிதி மற்றும் கணக்காய்வு மற்றும் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ கல்விப் பிரிவும் இதன் வணிக விஞ்ஞான பீடத்தின் கீழ் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞான கல்விப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளன.  

இந்த கற்கை நெறியின் தரத்தை மேம்படுத்த இப்பாடத்திட்டங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கவும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை  பல்கலைக்கழகமாக ஸ்தாபிப்பதற்கு நகரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Thu, 05/23/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை