மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்க முடிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளார்.  

இந்திய பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது.  

இரண்டாவது பதவிக்காலத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 30ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.  

புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொள்ள பல சர்வதேச தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/27/2019 - 10:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை