மேல், தென், கொழும்பு கரையோரங்களில் கடும் மழை; பலத்த காற்று

கொழும்பு முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு, மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஆகவே, மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Wed, 05/29/2019 - 13:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை