யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் தற்காலிகமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்ட கடிதத்தின் ஊடாக இத் தகவலானது நேற்றுக்காலை கொழும்பிலிருந்து தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
எனினும், என்ன காரணத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார் என்பது கூறப்பட்டிருக்கவில்லை. இதேவேளை, இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குச் செல்லும் உப வேந்தர், இது தொடர்பாக ஆணைக்குழுவிடம் வினவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(கோப்பாய் நிருபர்)
Tue, 05/07/2019 - 08:09
from tkn