பயங்கரவாதிகளுடன் நீதிபதிகளுக்கு தொடர்பு

முன்னரும் முறைப்பாடு செய்ததாக தெரிவிப்பு

பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள நீதிபதிகள் குறித்து ஏற்கெனவே சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தாக்குதல் நடந்த பின்னர் மீண்டும் இது தொடர்பில் தான் அம்பலப்படுத்தியதாகவும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தான் தெரிவித்த தகவல்களை நீதி அமைச்சருக்கும் தொடர்புள்ள ஏனைய தரப்பினருக்கும் அறிவிக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளுடன் சில நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு நீதி அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்ததோடு தனக்கு இது பற்றி அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர், தேசிய தௌஹீத ஜமாத் பள்ளிவாசல் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்த போது வாழைச்சேனை நீதவான் ஒருவர் பக்கசார்பாக செயற்பட்டார். இது தொடர்பில் பொதுமக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டிருந்தார்கள். இவர் பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டது குறித்து தாக்குதலுக்கு முன்னரே தகவல் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் முன்கூட்டி அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை