அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதற்கமைய, ரஞ்சித் மத்தும பண்டார வகித்த கிராமிய பொருளாதார அலுவல் அமைச்சு, அமைச்சர் பீ.ஹரிசனுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, புதிய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஐ.தே.க. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ரஞ்சித் மத்தும பண்டார - பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்.
பீ.ஹரிசன் - விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.
வசந்த சேனாநாயக்க - வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.
from tkn