தும்மலசூரியவில் 8 பெற்றோல் குண்டுகள் மீட்பு

தும்மலசூரிய பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த பகுதியிலிருந்து 8 பெற்றோல் குண்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வாள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடை மற்றும் 560,000 ரூபா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

தும்மலசூரிய பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று (27)  நடத்திய சோதனையின்போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tue, 05/28/2019 - 14:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை