எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
வெசாக் போயா தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வருவதனாலும், மறுநாள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினமாக வருவதனாலும், எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
Wed, 05/15/2019 - 15:07
from tkn