இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக தனியார் கத்தோலிக்கப் பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கத் திட்டமிட்டுள்ளதாக, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
புதிதாக அச்சுறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில் வெசாக் விடுமுறை வரை இப்பாடசாலைகள் மூடப்படும் எனவும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு தேவாலயங்களில் ஆராதனையை அடுத்த ஞாயிறு முதல் தொடங்கி நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.
Thu, 05/09/2019 - 16:46
from tkn