அம்பலாங்கொடை கடற்பரப்பில் படகு கவிழ்வு; 10 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மீனவர்களின் படகொன்று கவிழ்ந்த போதிலும், அப்படகில் பயணித்த 10 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை துறைமுகத்திலிருந்து  சென்றிருந்த படகே நேற்று (11) கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ்வாறு காப்பாற்றப்பட்ட மீனவர்கள், காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதோடு,  அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Sun, 05/12/2019 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை