வவுனியாவில் காட்டுத்தீ

வவுனியா, குடாகச்சகொடி பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 5 ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று (11) மாலை திடீரென தீ பரவியுள்ளது.

வவுனியா தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

(கே.வசந்தரூபன் -வவுனியா விசேட நிருபர்)

Sun, 05/12/2019 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை