பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் தற்போது  தற்போது உயர்வாகக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் வேளைகளில் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுதோடு, பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆகவே, பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Tue, 04/23/2019 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை